Wednesday, July 30, 2008

நன்றி

முத‌ல் முறை தத்தி த‌த்தி ந‌ட‌ந்தேன்
அம்மா வாழ்த்தினார்க‌ள்
ந‌ட‌க்க‌ க‌ற்றுக்கொண்டேன்

ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன்
தாத்தா வாழ்த்தினார்
ஒட‌ க‌ற்றுக்கொண்டேன்

முத‌ல் நாள் ப‌ள்ளிக்கூட‌ம்
ஆசிரிய‌ர் வாழ்த்தினார்
ப‌டிக்க‌ க‌ற்றுக்கொண்டேன்

ம‌ண்ணில் இட்ட‌ விதை முளைத்த‌போது
அப்பா வாழ்த்தினார்
விடாமுய‌ற்சியை க‌ற்றுக்கொண்டேன்

தோல்வியில் துவ‌ண்டு போனேன்
ந‌ண்ப‌ர்க‌ள் வாழ்த்தினார்க‌ள்
தோல்வியை வெற்றியாக்க‌ க‌ற்றுக்கொண்டேன்

க‌விதை எழுதினேன்
நீங்க‌ள் வாழ்த்தியுள்ளீர்க‌ள்
இன்று தொட‌ங்குகிறேன் என் க‌விதை ப‌ய‌ண‌த்தை!

உங்க‌ள் வாழ்த்திலே
என் வ‌ள‌ர்ச்சி
உங்க‌ள் வாழ்த்துக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி!

No comments: