முதல் முறை தத்தி தத்தி நடந்தேன்
அம்மா வாழ்த்தினார்கள்
நடக்க கற்றுக்கொண்டேன்
நடக்க ஆரம்பித்தேன்
தாத்தா வாழ்த்தினார்
ஒட கற்றுக்கொண்டேன்
முதல் நாள் பள்ளிக்கூடம்
ஆசிரியர் வாழ்த்தினார்
படிக்க கற்றுக்கொண்டேன்
மண்ணில் இட்ட விதை முளைத்தபோது
அப்பா வாழ்த்தினார்
விடாமுயற்சியை கற்றுக்கொண்டேன்
தோல்வியில் துவண்டு போனேன்
நண்பர்கள் வாழ்த்தினார்கள்
தோல்வியை வெற்றியாக்க கற்றுக்கொண்டேன்
கவிதை எழுதினேன்
நீங்கள் வாழ்த்தியுள்ளீர்கள்
இன்று தொடங்குகிறேன் என் கவிதை பயணத்தை!
உங்கள் வாழ்த்திலே
என் வளர்ச்சி
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment