காலைக்கதிரவனாய் எழுந்து
எனக்காக சமைத்துக்கொண்டிருந்தாய்
தூதுவன் வந்து ஒலையை தந்துபோனான்
"காவலுக்கு ஆளில்லை! காற்றுக்கு முன் வா!
தாய்நாட்டின் மானம் காக்க வா ! " என்று
கலங்கா நெஞ்சுடன் அழாத கண்களுடன்
என்னை வழியனுப்பிவைத்தாய்
கண்ணே!
இங்கு உன் தும்பை பூ நெஞ்சம் போல் எங்கும் பனிபடர்ந்த மலைகள்!
நீ ஒருநாள் கதிரவனை சபித்துக்கொண்டிருந்தாய்
அது பனித்துளிகளை அழித்தற்காக.
இங்கு ஆயிரம் பனிமலைகள்
ஆதவனை மறைத்துவிட்டன.
உன் சாபம் பலித்துவிட்டது.
உன்னைப்போல் என் எதிரிக்கும் மனைவியிருப்பாள்
ஆனால்! என் தாயை திருட நினைப்பவன் மேல்
கருணையும் காணாமல்போகிறது
கதிரவன் மறையும் தருணத்தில்
செங்குருதி நிரப்பிய நிலத்தைக் கண்டேன்
அது, ஆதவன் ஒளியால் அல்ல
அந்நியன் நுழைந்தால் கலங்கிப்போன என் தாயை
அவன் செங்குருதியால் மகிழ்வித்ததால்!
வலியால் நீ அழுதபோது
கைகொண்டு உன் கண்ணீர் துடைக்காமல்
தாய் நாட்டின் மானம் காக்க வந்தேன்
உன் வலி என்னில் ஆரா ரணமாகிப்போனது
மன்னித்து விடு கண்ணே!
கடமை அழைத்ததால் காவலுக்கு வந்தேன்
வெற்றியுடன் வருவேன்
தாய் நாட்டின் கலங்கம் துடைத்து
உன் கண்ணீர் துடைக்க
நேற்று கடவுள் கனவில் வந்தார்
போர்களத்தில் வீழும் தருவாயில்
என் மனைவின் மடியில் உயிர்விடவேண்டுமென்ற
வரம் கேட்டேன். தந்து போனார்.
அவரிடம் கேட்க மறந்துபோனதை
உன்னிடம் கேட்கிறேன்
" நான் காணும் கடைசி காட்சி
முழுமதியாய் புன்னகை நிரம்பிய உன்முகமாக வேண்டும்.
நான் கேட்கும் கடைசி செய்தி
தாய்நாட்டின் வெற்றியாக வேண்டும்"
விரத்துடன் வழியனுப்பிவை
மாண்டு போனாலும் உன் கருவரையில்
மகனாய் பிறப்பேன்
போர்களத்தில் வீரத்துடன் போரிட்டு மடிந்தவர்கள்
வீரச்சொர்கம் அடைவார்கள்
என் சொர்கம் உன் கருவறையே
காத்திரு கண்மணி!
வெற்றியுடன் வீரத்திருமகனாய் வருவேன்
இல்லை ! உன் வயிற்றில் வீரமகனாய் பிறப்பேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment