ரோஜாவை விட மென்மையான பாதம்
அவை நெஞ்சில் படுவதே சுகம்
தத்தி தத்தி நடக்கும் நடை
என் இதயத்தை தட்டி தட்டிச் செல்லும்
மிண்மிணி பூச்சிகளாய் கண்கள்
ஆனால் ஓளியோ நட்சத்திற்கு ஒப்பானது
உங்கள் முத்தத்திற்காக
என் தாடியையும் தானம் செய்தேன்
உங்கள் சவாரிக்காக
நான் யானையாகி மகிழ்தேன்
உங்களை சுமப்பதற்காகவே
என் தோள்கள் படைக்கப்பட்டன
உங்கள் வருகையால்
நிரம்பிய நெற்களஞ்சியமானது எனது வீடு
நீங்கள் தலைசாய்த்து பார்க்கும்போது
என் உயிரில் புது ஜீவன் ஊற்றெடுக்கும்
மழலையாய் மாமா என்றழைக்கும்
தருணத்திற்காகவே தவமிருக்கிறேன்
நீங்கள் பூவாய் சிரிப்பதற்காக
அதில் ஊற்றும் நீராய் மாறுவேன்!
உங்கள் கலங்கமில்லா சிரிப்பு
என் இதயத்தில் தேவகானமாய் என்றென்றும் ஒலிக்கும்!
உங்களால் நானும் இன்று
குழந்தையாகிப்போனேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment