Wednesday, July 30, 2008

குழ‌ந்தை

ரோஜாவை விட‌ மென்மையான பாத‌ம்
அவை நெஞ்சில் ப‌டுவ‌தே சுக‌ம்
த‌த்தி த‌த்தி ந‌ட‌க்கும் ந‌டை
என் இத‌ய‌த்தை த‌ட்டி த‌ட்டிச் செல்லும்
மிண்மிணி பூச்சிக‌ளாய் க‌ண்க‌ள்
ஆனால் ஓளியோ ந‌ட்ச‌த்திற்கு ஒப்பான‌து
உங்க‌ள் முத்த‌த்திற்காக‌
என் தாடியையும் தான‌ம் செய்தேன்
உங்க‌ள் ச‌வாரிக்காக‌
நான் யானையாகி ம‌கிழ்தேன்
உங்க‌ளை சும‌ப்ப‌த‌ற்காக‌வே
என் தோள்க‌ள் ப‌டைக்கப்ப‌ட்ட‌ன‌
உங்க‌ள் வ‌ருகையால்
நிர‌ம்பிய‌ நெற்க‌ள‌ஞ்சிய‌மான‌து என‌து வீடு
நீங்க‌ள் த‌லைசாய்த்து பார்க்கும்போது
என் உயிரில் புது ஜீவ‌ன் ஊற்றெடுக்கும்
ம‌ழ‌லையாய் மாமா என்ற‌ழைக்கும்
த‌ருண‌த்திற்காக‌வே த‌வ‌மிருக்கிறேன்
நீங்க‌ள் பூவாய் சிரிப்ப‌த‌ற்காக‌
அதில் ஊற்றும் நீராய் மாறுவேன்!
உங்க‌ள் க‌ல‌ங்க‌மில்லா சிரிப்பு
என் இத‌ய‌த்தில் தேவ‌கான‌மாய் என்றென்றும் ஒலிக்கும்!
உங்க‌ளால் நானும் இன்று
குழ‌ந்தையாகிப்போனேன்.

No comments: