Wednesday, July 30, 2008

புர‌ட்சி

நாங்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டிருக்கிறோம்!
எங்க‌ள் கைக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து!
அடையாள‌ம் அழிக்க‌ப்ப‌டுகிற‌து !
வாழ்கை பூவில்லா பூங்காவான‌து
இடியென‌ முழங்கும் வெடிக‌ளின் ச‌த்த‌ம் தாலாட்டான‌து
சொந்த‌ ம‌ண்ணில் அநாதையாக்க‌ப்ப‌ட்டோம்
எவ்வ‌ள‌வு இர‌த்த‌ம் சிந்தியும்
சுக‌ந்திர‌ தாக‌ம் ம‌ட்டும் த‌ணிய‌வில்லை!
எம்ம‌க்க‌ள் க‌ண்ணிர் துடைக்கும் கைக‌ள் எங்கே ?
காய்க‌ள் விளைய‌வேண்டிய‌ நில‌த்தில்
க‌ந்த‌க‌த்தை விதைத்துப்போன‌து யார்?
அன்று ம‌கிந்த‌னை வென்ற‌ சோழ‌ன்
இன்று இல்லாம‌ல் போன‌து ஏன்?
எங்க‌ளை கொன்று புதைக்காம‌ல் விதைத்திருக்கிறார்க‌ள்!
நாங்க‌ள் மீண்டும் முலைப்போம்!
மீண்டும் சுக‌ந்திர‌ச் செடிக்கு உர‌மாவோம்!
த‌டைக‌ளை த‌க‌ர்ப்போம்
ந‌ம் கைகொண்டு ந‌ம் க‌ண்ணிர் துடைப்போம்!
ஏட்டிலிருந்த‌ த‌மிழ‌னின் வீர‌ம் இன்று வீட்டில் இருக்க‌ட்டும் !
வ‌ந்தோரை வாழ‌வைக்கும் த‌மிழ‌ன்
இன்று ஏன் த‌ன் இன‌ம் காக்க‌ ம‌ற‌ந்துபோனான்
நாம் ஏன் ஒருதாய் வ‌யிற்று ம‌க்க‌ள் என்ப‌தை ம‌ற‌ந்துபோனோம்?
அற‌ம்,வீர‌ம்,காத‌லை உல‌கிற்கு த‌ந்த‌ இன‌ம்
இன்று அழிந்துகொண்டிருக்கிற‌து
புற‌ப்ப‌டுங்க‌ள் தோழ‌ர்க‌ளே!
சுக‌ந்திர‌ காற்றை சுவைக்கும் வ‌ரை
இமை மூடாதிருப்போம்!
ஒடுங்கிய‌ கைக‌ள் ஓங்கும் போது
அது விண்ணையே முட்டும்!
நம் இர‌த்த‌ம் கொண்டு
எழுதுவோம் த‌மிழ‌னின் புதிய‌ வ‌ர‌லாறு.


(see the below picture)

No comments: