காவிரியின் கரையில் நடந்து கொண்டிருந்தேன்
உழவர்களின் உழைப்பு நிலத்தில் தெரிந்தது
நிலமகளுக்கு பச்சைபட்டாடை அணிவித்திருந்தார்கள்
கரையோர மரங்களின் நன்றி
அவை செறிந்த பூக்களில் தெரிந்தது
பன்னீர் மரங்களின் தயவால்
பன்னீர் சென்று கொண்டிருந்தது காவிரியில்
நீரில் கால் நனைத்து நின்றேன்
காவிரில் மோதிய காற்று
பன்னீரை தெளித்துபோனது முகத்தில்
காவிரி நீர் கொண்டு வளர்ப்பதால் தான்
எங்கள் கரும்பும் பன்னீராய் இனிக்கிறது
தலை சாய்த்து நின்ற என் நெல் நண்பன்
என் வருகையை தலையாட்டி வரவேற்றான்
என் இரகசிய சிநேகிதன் இரயில்
கூக்குரலிட்டு சென்றான்
நான் ஒடிவிளையாடிய வாய்க்காலில்
என்னை கண்டதும் துள்ளி ஒடியது நீர்
நீலவானத்தில் இட்ட குங்குமமாய்
மாலை சூரியன் மங்கலமாய் இருந்தான்
அல்லியும் தாமரையும் துள்ளி விளையாடும் தடாகம்
அதன் அருகில் நிற்பதே சுகம்
நான் நீச்சல் பழகிய குளமே சுகமா என்றேன்?
மீன்கள் துள்ளி குதித்தது
அல்லியும் தாமரையும் தலையாட்டி சுகமென்றது.
என் எல்லா வரங்களையும் தந்த
எல்லைசாமி தனியாக இருந்தார்
விழுந்து கும்பிட்டேன் என் சாமியை
எங்களையும், நிலத்தையும் காத்தற்காக
எட்டு வருடங்கள் உங்களை பிரிந்து
நகரம் என்ற நரகத்தில் இருந்தேன்
இன்று
தாய் தேடி ஒடி வரும் கன்று போல்
உன்னைத்தேடி ஒடிவருகிறேன்
மீண்டும் உன் மடியில் ஒர் இடம் கிடைக்குமா ?
என் கிராமமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment