Wednesday, July 30, 2008

என் கிராமம்

காவிரியின் க‌ரையில் ந‌ட‌ந்து கொண்டிருந்தேன்
உழ‌வ‌ர்க‌ளின் உழைப்பு நில‌த்தில் தெரிந்த‌து
நில‌ம‌க‌ளுக்கு ப‌ச்சைப‌ட்டாடை அணிவித்திருந்தார்க‌ள்
க‌ரையோர‌ ம‌ர‌ங்க‌ளின் ந‌ன்றி
அவை செறிந்த‌ பூக்க‌ளில் தெரிந்த‌து
ப‌ன்னீர் ம‌ர‌ங்க‌ளின் த‌ய‌வால்
ப‌ன்னீர் சென்று கொண்டிருந்த‌து காவிரியில்
நீரில் கால் ந‌னைத்து நின்றேன்
காவிரில் மோதிய‌ காற்று
ப‌ன்னீரை தெளித்துபோன‌து முக‌த்தில்
காவிரி நீர் கொண்டு வ‌ள‌ர்ப்ப‌தால் தான்
எங்க‌ள் க‌ரும்பும் ப‌ன்னீராய் இனிக்கிற‌து

த‌லை சாய்த்து நின்ற‌ என் நெல் ந‌ண்ப‌ன்
என் வ‌ருகையை த‌லையாட்டி வ‌ர‌வேற்றான்
என் இர‌க‌சிய‌ சிநேகித‌ன் இர‌யில்
கூக்குர‌லிட்டு சென்றான்
நான் ஒடிவிளையாடிய‌ வாய்க்காலில்
என்னை க‌ண்ட‌தும் துள்ளி ஒடிய‌து நீர்
நீல‌வான‌த்தில் இட்ட‌ குங்குமமாய்
மாலை சூரிய‌ன் ம‌ங்க‌ல‌மாய் இருந்தான்
அல்லியும் தாம‌ரையும் துள்ளி விளையாடும் த‌டாக‌ம்
அத‌ன் அருகில் நிற்ப‌தே சுக‌ம்
நான் நீச்ச‌ல் ப‌ழ‌கிய‌ குள‌மே சுக‌மா என்றேன்?
மீன்க‌ள் துள்ளி குதித்த‌து
அல்லியும் தாம‌ரையும் த‌லையாட்டி சுக‌மென்ற‌து.

என் எல்லா வ‌ர‌ங்க‌ளையும் த‌ந்த‌
எல்லைசாமி த‌னியாக‌ இருந்தார்
விழுந்து கும்பிட்டேன் என் சாமியை
எங்க‌ளையும், நில‌த்தையும் காத்த‌ற்காக‌
எட்டு வ‌ருட‌ங்க‌ள் உங்க‌ளை பிரிந்து
ந‌க‌ர‌ம் என்ற‌ ந‌ரக‌‌த்தில் இருந்தேன்
இன்று
தாய் தேடி ஒடி வ‌ரும் க‌ன்று போல்
உன்னைத்தேடி ஒடிவ‌ருகிறேன்
மீண்டும் உன் ம‌டியில் ஒர் இட‌ம் கிடைக்குமா ?
என் கிராம‌மே!

No comments: