Tuesday, May 12, 2009

நான் தமிழன்

ஆயிர‌மாயிர‌ம் ம‌க்க‌ளின் ம‌ர‌ண‌ம்
வாய்திற‌க்காத‌ த‌லைமைக‌ள்
மேல் எழும் தீயில் த‌ன்னை துற‌ந்த‌ ச‌கோத‌ர‌ன்
உண‌வை ம‌றுத்த‌ ச‌கோத‌ரி
இவையாவும் எம்மையாலும்
க‌ல் சிலைக‌ளின் க‌ண்ணைத் திற‌க்க‌வில்லை

எத்த‌னை நாட‌க‌ங்க‌ள்
எத்த‌னை போர‌ட்ட‌ங்க‌ள்
எத்த‌னை ப‌த‌வி துற‌ப்பு
எத்த‌னை போர் நிறுத்த‌ அறிவிப்பு
எத்த‌னை க‌டித‌ங்க‌ள்
எத்த‌னை அறிக்கைக‌ள்
இவையாவும் கால‌த்தை க‌ட‌த்த‌வா
என் இன‌த் த‌லைவ‌ரே
உண‌ர்ந்து கொண்டோம் உம் நிற‌த்தை
ஆம்!
இத்தாலிய‌ மொழி
த‌ன்மான‌த் த‌மிழின் தாயான‌ போதும்,
தியாக‌த்தின் சின்ன‌மான‌ போதும்.

க‌ட‌ல் பிரித்திருக்கும் என் உற‌வுக‌ள்
க‌ண்ணீரில் வாட‌
உண‌வு ம‌ருந்தான‌து
ம‌ருந்து மாயையான‌து
மான‌த்திற்காக‌ மர‌ணித்த‌ ச‌கோதரியின் ம‌ர‌ண‌மும்
உம‌க்கு வெறும் அதிர்வுக‌ளாகிப்போன‌து ஏன்?
இவையாவும் எம‌க்கு இன அழிப்பான‌து ஏன்?


எது ப‌ய‌ங்க‌ர‌வாத‌திற்கு எதிரான‌ போர் ?
யார் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ?
க‌ருவுற்றிருக்‌கும் தாயும்
அக்க‌ருவில் இருக்‌கும் சிசுவும்
த‌ம்பின் ப‌சிக்காக‌ கையேந்தும் த‌ம‌க்கையும்
பால் ம‌ணம் மறவா பிஞ்சும்
சிங்க‌ள‌ வெறிய‌ர்க‌ளுக்கு ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள்
ந‌ம‌க்கு இவ‌ர்க‌ள் நாளைய‌ த‌மிழின் அடையாள‌ம்


எம் உற‌வுக்காக‌
என் கைக‌ள் நீளும்
நான் உற‌க்க‌ பேசுவேன்
இதை த‌டுப்ப‌து இந்திய‌ இறையாண்மையானால்
நான் இந்திய‌னில்லை
என‌க்கு இறையாண்மையும் இல்லை
நான் த‌மிழ‌ன்

Monday, September 15, 2008

உடைந்த‌ இத‌ய‌ம்

என் க‌ண்ணின் பாவையான‌ பாவையே
சில‌ ஆண்டுக‌ள் முன்
  நான் த‌னிம‌ர‌மாய் இருந்தேன்
என்னில் நீ க‌ட்டிய‌ காத‌ல் என்ற‌ கூட்டினால்
  நீயே என் துணையென‌ உண‌ர்ந்தேன்
நாம் காத‌லித்த‌ நாட்க‌ளில்
  ந‌ம்மை உல‌க‌ம் சுற்றுவ‌தாய் உண‌ர்ந்தேன்
பூக்கும் பூவெல்லாம்
  உன‌க்காக‌ பூப்ப‌தாக‌ கொண்டேன்
உன‌க்காக‌ காத்திருக்கும் ஒவ்வொரு
  விணாடியும் ர‌ண‌மான வ‌லியே
அந்த வ‌லியும், நீ பூக்கும் புன்ன‌கையில்
  ம‌றைந்து போகும‌டி என் பிரிய‌ச‌கி

நீயே நினைவானாய், என் எழுத்தானாய்
என் எண்ண‌மானாய், என் உயிரின் உயிரானாய்
என்னுள் க‌ருவான‌ காத‌லை
  க‌விதையாய் பிர‌ச‌வித்த‌வ‌ளும் நீயே
பிற‌ந்த‌து காத‌ல் என்ற‌ குழ‌ந்தையடி
  அதை எவ்வாறு கொல்ல‌த்துணிந்தாய் நீ!
நீ க‌ட்டிய‌ காத‌ல் என்ற‌ கூட்டை
  நீயே க‌லைக்க‌த் துணிந்தாய் ஏன‌டி !
"ம‌ற‌ந்து விடு" என்ற‌ ஒற்றை வார்த்தையில்
  இடியை இற‌க்கிப்போனாய் என் இத‌ய‌த்தில்
க‌ருகிய‌ பூவான‌து என் இத‌ய‌ம் !


நாம் ந‌ட‌ந்த‌ த‌ட‌த்தை
  அழிக்க‌வும் அஞ்சிநின்ற‌து அலை
ஆனால் நீயே அதை அழித்துப் போனாய் ஏன‌டி
என்ன‌வ‌ள் என்ற‌ உரிமையுட‌ன் இருந்தேன்
  ம‌ன‌ம் ஏற்க‌ ம‌றுக்கிற‌து
நீ இல்லை என்ப‌தை!
விழித்து விழித்து பார்க்கிறேன்
  நீ சொன்னதெல்லாம் பொய்யாகும்
நட‌ந்த‌தெல்லாம் க‌ன‌வாகும் ஆசையுட‌ன்
க‌ண்க‌ளையும் நீ திருடிச் சென்ற‌ப்பின்
  தூக்க‌மும் அதில் வ‌ரும் க‌ன‌விற்கும் வ‌ழியேது!

கிழ‌க்கே உதிக்காத சூரிய‌ன்
நில‌வில்லா பெள‌ர்ன‌மி
உயிரில்லா உட‌ல்
க‌ண்ணீர் இல்லா க‌ண்க‌ள்
வார்த்தை இல்லா க‌விதை
நீ இல்லா என் வாழ்கை
இவையாவும் அர்த்த‌ம‌ற்ற‌வை!
நின்றுபோன‌  க‌டிகார‌மானேன்
 நீ சொன்ன‌ "மற‌ந்து விடு" என்ற‌ வார்த்தையில்!
உன்னை மண‌க்கோல‌த்தில் இன்னொருவ‌னுட‌ன் பார்க்கும் முன்
ம‌ர‌ண‌த்தை ம‌ணந்து ம‌ரித்துப்போகிறேன‌டி!
இது என் உயிர் தீப‌ம் எரியும் க‌டைசி நிமிட‌ம்
இந்த‌ உல‌க‌த்திற்கு உர‌க்க‌ச்சொல்கிறேன் ‍
  நான் இற‌க்கும் முன் 
  கால‌மும் அழிக்க‌ முடியாது என் காத‌லை
  நீ என்னவ‌ள் என்ற‌ உரிமையை ப‌றிக்க‌வும் முடியாது.

Thursday, August 21, 2008

கண்ணீரில் வாழும் மீன்கள்

கரை மீது கொண்ட காதலால்
அதை அணைத்துப் போனது கடலலை
என்று முடியும் இந்த காதல் போராட்டம்
கரை ஏற்றுக் கொள்ளுமா அலையின் காதலை?
கடல் மீது கொண்ட காதலால்
கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் கதிரவன்
காதலியை தழுவப்போவதை எண்ணியதால்
அவன் முகம் நாணத்தால் சிவந்திருந்தது
கதிரவனின் ஒரு நாள் பிரிவையும் தாங்கமுடியா கடல்
தன் காதலனாயை எட்டி அணைக்க முயன்று கொண்டிருந்தாள்
இவர்களின் காதல் விளையாட்டை
கரையில் நின்ற கலங்கரை விளக்கு
கண் சிமிட்டி பார்த்துக் கொண்டிருந்தது.

அழ்கடலின் அரவாரத்துடன், மக்களின் விசும்பல் கலந்திருந்தது
கைகளில் வலையுடன் கண்களில் நீருடன்
விடைபெறும் இவர்கள் மீனவர்கள்.
நாளை உதயம் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன்
கடலாடும் மனிதர்கள் இவர்கள்
கட்டிய மனைவி கண்ணீருடன் வழியனுப்ப
கடலொடும் இவர்கள் நாளை கரைகாண்பது யார் கையில்
கரையில் காத்திருக்கும் காதல் மனைவிக்கு
நாளைய பரிசு அன்புக் கணவனின் முத்தமா அல்லது
துப்பாக்கித்தோட்டா முத்தமிட்ட அவனது உயிரற்ற உடலா ?

துருவ நட்சத்திரத்தை துணையாக்கி
பயணப்படும் இவர்கள்
தன் காதலிக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள்
" ஆழ்கடலில் மூழ்கினாலும் கலங்காதே என் கண்ணே
உன்காது மடலில் முத்தமிடும் முத்தாவேன்
உன்காதோடு காதலுடன் கவிதைபாடுவேன் என்றென்றும் "
ஆறுதல் வார்த்தைகள் அழுகையை வரவைத்தது ஏன்?
தண்ணீரில் ஓடமிடும் இவர்கள் கண்ணீரில் வாழும் மீன்களானது ஏன்?
கண்ணைப்பறிக்கும் மின்னலில்
கடலில் மீன் பறிக்கும் இவர்களுக்கு
சுனாமியும், சுறா மீனும் ஒன்றுதான்
இவர்கள் நீலக்கடலில் வலைவீசிப் பிடிப்பது
நாளைய வாழ்வின் வசந்தத்தை!

எல்லையில்லா அன்பு கொண்ட கடலுக்கு
எல்லை வகுத்தவர்கள் யார்?
அவர்கள் தன் தாயின் அன்பிற்கும்
எல்லை வகுத்திருப்பார்கள்
எங்கும் நீர் நிரம்பிய கடலில்
இவர்களால் எவ்வாறு எல்லைக் கோடிடமுடிந்தது
எல்லை தாண்டிய இவர்கள் மேல்
இலங்கை வீரர்களுக்கு இரக்கம் இல்லாமல் போனது ஏன்?
மனிதனை மனிதனாய் மதிக்க தெரியாதவர்கள்
மகிந்தனின் வீரர்களாய் இருப்பதில் வியப்பில்லை!
அலைகடலுடன் போராடும் எங்களை
ஆயுதம் எடுத்து போராடவைக்காதீர்கள்
முடிவென்பது ஒன்று உண்டு
அது எங்கள் அமைதிக்கும் உண்டு

Wednesday, August 6, 2008

க‌ண்ணீர்

அறியாத‌ வ‌ய‌தில்
புரியாம‌ல் உன்னுட‌ன் ப‌ழ‌கினேன்
தாய் ஏள‌ன‌மாய் கேட்ட‌போது
உன்னையே க‌ல்யான‌ம் செய்வேன் என்றேன்
கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, நான்
க‌ல்லுரிக்கு ப‌ய‌ணிக்கும் முன்
என் க‌ழுத்தைக்க‌ட்டிக்கொண்டு க‌ண்ணீருட‌ன்
"என்னை ம‌ற‌ந்திடாதீங்க‌ மாமா" என்றாய்
உன் கையில் ச‌த்திய‌ம் செய்தேன்
"தாய்மொழியை ம‌ற‌ந்தாலும்
உன்னை ம‌ற‌வேன்" என்று
அழ‌கான உன் க‌ண்ணீரில் இரு துளிக‌ளை
என் கைக்குட்டையில் ஏந்தி
உன் நினைவாய்
இம்முத்துக்க‌ளை எடுத்துக்கொள்கிறேன் என்றேன்
பூவாய் சிரித்தாய்
இப்போதும் க‌ண்ணீர் துளிர்த்த‌து
ஆனால் ஆன‌ந்த‌மாய்

க‌ல்லூரி விடுமுறையில்
வீட்டிற்கு ப‌ய‌ண‌ம்
உன் நினைவுக‌ளை சும‌ந்த‌ப‌டி
வீட்டின் வாச‌லில்
என்னை தேடும் க‌ண்க‌ளையே
எப்போதும் என் க‌ண்க‌ள் தேடும்
அழ‌கான உன் க‌ரு இரு விழிக‌ளை
என் விழிக‌ள் நோக்கினால்
அவை நில‌ம் நோக்கும்
நான் புன்ன‌கையுட‌ன், நாண‌மும்
உன்னைப்போல‌ அழ‌கென்றேன்

நான்கு ஆண்டுக‌ள் முடிவில்
க‌ல்லூரி தோழியுட‌ன்
வீட்டிற்கு வ‌ந்தேன்.
என் தேவ‌தையை அவ‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌!
என்னை பார்த்து சிரித்த‌ விழிக‌ள்
என் தோழியை பார்த்து அழ‌ ஆர‌ம்பித்த‌து
தோட்ட‌த்தில் இருந்த‌ என் செல்ல‌ ம‌ர‌த்தை
க‌ட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாய்
நான் சிரித்து விட்டு
"முக‌ம் காட்ட‌ வேண்டிய‌ நிலா
இன்று ஏன் முதுகு காட்டிக் கொண்டிருக்கிற‌து" என்றேன்
முன்னமும் வேக‌மாய் அழுதாய்
உன் பாச‌மும் அழ‌கென்றேன் !
உன் க‌ண்ணீர் ம‌ழை அருவியான‌து
என் கைகுட்டையில் இருந்த‌
இரு க‌ண்ணீர் க‌ரைக‌ளைக் காட்டி
என் க‌ண்க‌ள் இங்கிருக்கும்போது
இன்னொரு பெண்ணை எவ்வாறு பார்க்கும் என்றேன்
என் க‌ழுத்தைக்கட்டிக்கொண்டு
ச‌த்த‌மாய் அழுதாய்
ஆனால் ஆன‌ந்த‌மாய் !
நான் தேற்ற‌ வேண்டுமென்று மீண்டும் அழுதாய்
உன்னை தேற்றாம‌ல் காத‌லித்துக்கொண்டிருந்தேன் க‌ண்ணீருட‌ன்.
ந‌ம்மை வாழ்த்தி கண்ணீர் போல‌
ப‌ன்னீர் பூக்க‌ளை செறிந்த‌து
நான் வள‌ர்த்த‌ செல்ல‌ ம‌ர‌ம்.

குழ‌ந்தை தொழிலாள‌ர்க‌ள்

இள‌ந்த‌ளிராய் இப்பூமியில்
இளையுதிர் கால‌த்தில் பிற‌ந்தோம்
வ‌ள‌ரும் முன் வீழ்ந்து போனோம்
குழ‌ந்தை தொழிலாள‌ர் என்ற‌ அடையாள‌மாய்

பிற‌க்கும் போதே தேய்பிறையானோம்
வாழ்க்கை விடியாத‌ நீண்ட‌ இர‌வான‌து
வ‌றுமையின் வ‌ர‌பிர‌சாத‌மாய்
பிற‌க்கும்போதே நாங்க‌ள் தொழிலாள‌ர்க‌ளானோம்

க‌ண்க‌ள் நிறைய‌ க‌ன‌வுக‌ளுட‌ன்
வாழ்க்கை நிறைய‌ வ‌றுமையுட‌ன்
வாழும் நாங்க‌ள்
நாளைய‌ இந்தியாவின் ந‌ம்பிக்கை

இந்தியாவின் எதிர்கால‌ம்
குழந்தைக‌ளின் கையில்
எங்க‌ளின் கையிலோ குப்பைக‌ள்
த‌ங்கையின் ப‌சிக்காக‌
த‌ந்தையின் குடிக்காக‌
தாயின் ம‌ருந்துக்காக‌
இப்ப‌டி எதோ ஒரு கார‌ண‌த்திற்காக‌
நாங்க‌ள் ஆக்கப்ப‌ட்டோம் தொழிலாள‌ர்க‌ளாய்

விடிய‌லை நோக்கி ஒரு ப‌ய‌ண‌ம்
விடியும் முன்
திசை தெரியா வாழ்க்கை க‌ட‌லில்
கல்வி என்னும் துடுப்பில்லா ப‌ய‌ண‌ம்
எங்க‌ளுக்கு
கை கொடுங்க‌ள்
கல்வி கொடுங்க‌ள்
க‌ட‌வுளாவீர்க‌ள்

Thursday, July 31, 2008

ம‌ன்னிப்பு

ம‌ர‌ண‌வாச‌லிலும்
ப‌கைவ‌னிட‌ம் ம‌ண்டியிட்ட‌தில்லை
மான‌ம் ம‌ர‌ணிக்கும்முன்
ம‌ரித்துப்போவான் ம‌ற‌த்த‌மிழ‌ன்
ஒரு கோழையிட‌ம் ம‌ண்டியிடுவ‌தா!

த‌மிழ்தாய் பெற்ற‌ வீர‌ம‌க்க‌ள் நாங்க‌ள்
த‌லையை த‌ந்தாயினும்
த‌ன்மான‌ம் காப்போம்

வாழ்ந்து வ‌ர‌லாறு ப‌டைத்தோம்
ச‌ற்றே புர‌ட்டிப்பார் அத‌ன் ஏடுக‌ளை
ம‌ண்டியிட்ட‌து யார்?
மாட்சிய‌டைந்த‌து யார்?
வீர‌சொர்க‌ம் யாரின் இருப்பிட‌ம்? என்று புரியும்
மான‌த்திற்காக ம‌றிப்ப‌வ‌ர்க‌ள் நாங்க‌ள்!

இழ‌ப்ப‌த‌ற்கு இருப்ப‌து உயிர் ம‌ட்டும்
காப்ப‌த‌ற்கு மான‌முண்டு!
அடைவ‌த‌ற்கு இல‌ட்சிய‌முண்டு!
வெல்வ‌த‌ற்கு நீயும் உண்டு.

காத்திரு !
எங்க‌ள் எழுச்சி தொலைவில்லை!
அழிவு உன் அருகிலுண்டு
உல‌க‌ம் எங்க‌ளிட‌ம் ம‌ண்டியிடும் நாள் தூர‌மில்லை!
என்ன‌ விலைகொடுத்தாலும்
சுவாசித்தே தீருவோம் சுத‌‌ந்திர‌க்காற்றை!

அவ‌ள்

ப‌னித்துளி பூக்க‌ளுட‌ன் விளையாடும் அதிகாலைப்பொழுதில்
கிழ‌க்கே சூரிய‌ன் சோம்ப‌ல் முறித்துக்கொண்டிருந்தான்
அள்ளி முடிந்த ஈர‌க்கூந்த‌லுட‌ன்
ப‌ச்சைப்ப‌ட்டாடை அணிந்த‌ தேவ‌தை எதிரில் வ‌ந்தாள்
அவ‌ள் கூந்த‌லிருந்து விழும் நீர்முத்துக்க‌ள்
ம‌ழைநீர் போல் பூமியை ந‌னைத்த‌து
பூக்க‌ளோ இம்முத்துக்க‌ள் வேண்டும் என்று
த‌லைநீட்டி பூமியில் விழாம‌ல் த‌டுத்துக்கொண்டிருந்தது
அட‌ர்ந்த‌ காரிருளில் ஏற்றிவைத்த‌ முழுநில‌வு போல்
நீ ஒற்றை செவ்வ‌ந்தி பூவை கொய்து சூடினாய்
அந்த பூ எத‌ற்காக பூமியில் இருந்த‌து என்ப‌தை உண‌ர்ந்து
உன் கூந்த‌லில் ஆன‌ந்த‌ தாண்ட‌வ‌மாடிய‌து
சூரிய‌னும் சிறிது த‌டுமாறிப்போனான்
ஆம்! முழுநில‌வு பிர‌காசிக்கும் போது சூரிய‌னுக்கு என்ன வேலை
நீயோ ! என்னை க‌ண்ட‌வுட‌ன்
மேக‌த்தினுள் ம‌றையும் நில‌வு போல் ம‌றைந்துவிட்டாய்
நானோ க‌ல‌ங்க‌ரை விள‌க்கு தேடும் க‌ப்ப‌லானேன்
தூர‌த்தில் என் க‌ல‌ங்க‌ரை விள‌க்கு புன்ன‌கை வீசிக்கொண்டிருந்தது
நான் சூரிய‌னையை க‌ண்ட‌ ப‌னித்துளிப்போல் க‌ரைந்துப்போனேன்

ம‌ஞ்ச‌ள் பூசிய‌ முக‌த்தில்
ம‌ங்க‌ல‌மாய் குங்கும‌ம் இட்டு
மான் போல் துள்ளிவ‌ந்து
என் இத‌ய‌த்தில் நுழைந்த‌வ‌ளே
காற்றிட‌ம் என் காத‌லை சொல்லி தூது அனுப்பினேன்
ஆனால் காத‌லை சொல்லாத காற்று
உன் வாச‌னையை என் வீட்டில் நிர‌ப்பிப்போன‌து
அன்று முத‌ல் உன்னையே சுவாசிக்கிறேன்
நீரிட‌ம் என் காத‌லை க‌விதையாக்கி அனுப்பினேன்
க‌ட‌லில் க‌ல‌ந்த‌ நீர் அலையாகிவிட்ட‌து
உற்றுக்கேள் அலை சொல்லும் க‌விதையை
அதில் என் காத‌லிருக்கும்
ப‌சுவிட‌ம் உன்மேல் நான் கொண்ட‌
காத‌லை க‌தையாக்கிச்சொன்னேன்
அது அம்மா என்று அழைக்கும் குர‌ல் கேட்கிற‌தா
அத‌னிட‌ம் கேள்! சொல்லும் என் காத‌லை.