இளந்தளிராய் இப்பூமியில்
இளையுதிர் காலத்தில் பிறந்தோம்
வளரும் முன் வீழ்ந்து போனோம்
குழந்தை தொழிலாளர் என்ற அடையாளமாய்
பிறக்கும் போதே தேய்பிறையானோம்
வாழ்க்கை விடியாத நீண்ட இரவானது
வறுமையின் வரபிரசாதமாய்
பிறக்கும்போதே நாங்கள் தொழிலாளர்களானோம்
கண்கள் நிறைய கனவுகளுடன்
வாழ்க்கை நிறைய வறுமையுடன்
வாழும் நாங்கள்
நாளைய இந்தியாவின் நம்பிக்கை
இந்தியாவின் எதிர்காலம்
குழந்தைகளின் கையில்
எங்களின் கையிலோ குப்பைகள்
தங்கையின் பசிக்காக
தந்தையின் குடிக்காக
தாயின் மருந்துக்காக
இப்படி எதோ ஒரு காரணத்திற்காக
நாங்கள் ஆக்கப்பட்டோம் தொழிலாளர்களாய்
விடியலை நோக்கி ஒரு பயணம்
விடியும் முன்
திசை தெரியா வாழ்க்கை கடலில்
கல்வி என்னும் துடுப்பில்லா பயணம்
எங்களுக்கு
கை கொடுங்கள்
கல்வி கொடுங்கள்
கடவுளாவீர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment