மாலை சூரியன் நீலவானத்தில்
மஞ்சள் பூசிகொண்டிருந்தான்
அழகான ஆற்றங்கரை,
அதன் மீது கொண்ட காதலால்
அதை எப்போதும் தொட்டுக்கொண்டிருந்த மரம்
அருகில் என்னவள் எனக்காக
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தாள்!
முதன்முதல்!
உயிரின் நாதம் கேட்டேன்!
அழகான இயற்கையின்
இனிமையான மொழி கேட்டேன்!
என்றும் ஆரவாரத்துடன் ஒடும் ஆறு
உன் குழலின் இசை கேட்க அமைதியானது!
தூரத்தே பாடின குயிலும்
அதன் தலைவியின் குழல் ஒலிகேட்டு அமைதியானது!
உன் குழலின் இசையால்
என் ஜீவனை கரைத்துக்கொண்டிருந்தாய்!
நான் மெய் மறந்து நின்றேன்
காற்றும் நின்று போனது
எத்தனை யுகங்கள் கடந்துபோனது
எண்ணவும் மறந்துபோனேன்
முடிவில் என்னையும் மறந்துபோனேன்!
நீ உயிர் கொண்டு இசைத்துக்கொண்டிருந்தாய்
அது உயிர்களை அசைத்துக்கொண்டிருந்தது
முடிவில் இசைப்பதை நிறுத்தினாய்
நான் பூமியில் பிறந்தேன் மீண்டும்
இந்த இசை உன் மூச்சின் ஒலியா?
இல்லை மூங்கிலின் ஒலியா? என்ற கேள்வியுடன்
நீ எந்த புல்லாங்குழலை இசைத்தாலும் இசை ஒன்றே!
விடை உன் மூச்சின் ஒலி என்றேன்.
சூரியரின் சிவக்கும் நேரத்தில்
சுட்ட தங்கம் போல்
உன் கண்ணங்கள் சிவந்தன வெட்கத்தில்
உன் மடியில் தலைசாய்த்தேன்
" அருகில் நின்றிருந்த ஆறு
என்மேல் பொறாமை கொண்டு வேகமாய் ஒடியது!
சூரியனுக்கும் பொறாமை என்மேல்
சீக்கிரம் மறைந்து போனான் " என்றேன்
செல்லமாய் கோபப்பட்டாய் !
கள்ளி! நீயும் காதலிக்க கற்றுக்கொண்டாய் .........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment